முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு, சட்டமொன்று அவசியமில்லை - இஸ்லாமிய தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை இல்லாது செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மதத் தலைவர்களினால் அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை சட்டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடடார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் சகல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்பதனையே எண்ணுகின்றோம். இன்று நாட்டில் சட்டங்களுக்குள் ஒவ்வொரு இனங்களுக்கிடையே சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொது சட்டமொன்று இருக்கின்றது. ஆனாலும் முஸ்லிம் மக்களுக்கும், சிங்களத்தில் மலைநாட்டில் பிறந்தவர்களுக்கும் என்று சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்களில் சில விடயங்கள் மற்றைய இனங்களுக்குப் பொருந்துவதில்லை. கலாசார அடிப்படையில் அந்த சட்டங்கள் உருவாகின்றன. நாங்கள் ஒரே நாடு என்ற வகையில் வாழும்போது எல்லோருக்கும் ஒரே சட்டமாக இருக்க வேண்டும்.
திருமண சட்டத்தை எடுத்துக்கொண்டால் பொதுவாக திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக சட்டம் இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்திற்குள் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக வேறு ஒரு சட்டம் இருக்கின்றது. அவ்விடத்திலேயே நாங்கள் பிரிந்தே இருக்கின்றோம். 2009ஆம் ஆண்டு இஸ்லாமிய திருமண சட்டம் தொடர்பாக திருத்தம் மேற்கொள்ள மிலிந்த மொரகொட தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் 16 பேருக்கும் அது தொடர்பாக ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியாது போயுள்ளது. நாங்கள் பொது சட்டத்தை கொண்டுவர சகலரின் ஒத்துழைப்பும் அவசியமாக இருக்கின்றது.
அத்தோடு பாதுகாப்பு தரப்பினரால் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பாக கோரிக்கைகள் இருக்கின்றன. இது தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். பெண்கள் என்ற வகையில் அவர்களின் உரிமைகள் மீறப்படுவதுடன் இந்த உடைகளால் பெரும் அசௌகரிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்த உடைகள் தொடர்பாக சில இடங்களில் பொய்யான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை இல்லாது செய்ய வேண்டுமென்றால் முஸ்லிம் மதத் தலைவர்களினால் அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மறுபக்கத்தில் முகத்தை மூடி ஆடை அணிவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. இதனை சட்டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை.
அதனால் இது தொடர்பாக சகல கட்சிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சபாநாயகரின் தலைமையில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சிலர் தமது கலாசாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக சிந்தித்து செயற்படுவார்களாக இருந்தால் தனியான சட்டங்கள் அவசியமில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என்றார்.
Fantastic Madam; I know there are very much Sinhala well-behaved ladies but not like our Hon. Minister Talatha Atukorale. She is, of course, more than them. Very nice explanation.
ReplyDeletesRILANKA vil samadam wara wendum andal orea vali Thani singala rata Thani bhouda rata. iduwea singala bhouda makkalukku nimmadiyai kudukkum.inda ilakkai adayum warai iearhal ooyappowadillai.
ReplyDeleteஅவர்கள் செய்ய மாட்டார்கள் அந்த அளவுக்கு அறிவிருந்தால் எப்போதோ செய்திருப்பார்கள். இதை விடச் சிக்கல்கள் வருவதற்கு முன் முஸ்லீம் திணைக்களமாவது களத்தில் இறங்க வேண்டும்.
ReplyDelete