Header Ads



சண்டை பிடித்த அமைச்சர்கள், "கச்சால்" என்று நக்கடித்த ஜனாதிபதி

முதலீட்டு சபையின் திட்டம் என்று இரும்புக் கைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான திருகோணமலைக் காணி ஒன்றை தருமாறு அமைச்சர் மலிக் சமரவிக்ரம விடுத்த கோரிக்கையை துறைமுகங்கள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று -28- அமைச்சரவை கூட்டத்தில் நிராகரித்தார்.

இதனால் இரண்டு அமைச்சர்மாருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனை பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன “ “இது அலரிமளிகை கச்சால்” என்று நகைப்புடன் கூறியதாக அறியமுடிந்தது.

முதலீட்டு நடவடிக்கைகள் குறைந்துள்ளதால் அந்த காணியை வழங்குமாறு அமைச்சர்களான சஜித் மற்றும் மங்கள ஆகியோரும் அமைச்சர் சாகலவிடம் இங்கு வேண்டுகோள் விடுத்தனர்

எவ்வாறாயினும் அமைச்சர் சாகல விடாப்பிடியாக நின்றதால் – அமைச்சர் மலிக்கின் அமைச்சரவை பத்திரத்திற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கவில்லை. tamilan

No comments

Powered by Blogger.