Header Ads



முதலில் ஜனாதிபதியை கைது செய்துவிடுவேன் என்ற, அச்சத்தினாலே எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை

முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து விடுவேன் என்ற அச்சம் காரணமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தமக்கு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தமக்கு வழங்கப்படுவதனை தொடர்ச்சியாக ஜனாதிபதி நிராகரித்து வருவதற்கான காரணம் இதுவேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பில் இலங்கைத் தொழில்துறைசார் நிபுணர்களின் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் இதைனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை அமுல்படுத்துவது என்பது பழிவாங்குதல் கிடையாது எனவும், குற்றம் இழைத்தவர்கள் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை அமுல்படுத்தும் போது யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

வேறும் ஓர் அமைச்சுப் பதவியை வழங்கி பாதுகாப்புப் பேரவையில் ஆலோசகர் பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதி இணங்கிய போதிலும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.