Header Ads



இலங்கையில் ஜிஹாதி பயங்கரவாதத்தை முற்றாக, இல்லாதொழிக்க இந்தியா தனது பூரண ஆதரவை வழங்கும்


ஜிஹாதி பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இந்தியா தனது பூரண ஆதரவை வழங்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்திருக்கிறார்.

தலதா மாளிகைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, மல்வத்துபீட திம்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மாகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரியபீட வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மகாநாயக்க தேரர்களிடம் வெசாக் பண்டிகை வாழ்த்தைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையும் நினைவுகூர்ந்தார்.

(நா.தனுஜா)

3 comments:

  1. முதலில் இந்தியாவில் உள்ள RSS இந்து பயங்கரவாதத்தை ஒழித்தால் நல்லது. இலங்கையில் உள்ள அனைத்து பயங்கரவாதங்களையும் அழிக்க இலங்கை அரசும் இலங்கை படையும் போதுமானது

    ReplyDelete
  2. So u will feed the Singhala terrorism and RSS terrorism????

    ReplyDelete
  3. இலங்கையின் முன்னேற்றத்திற்கு இந்தியா பெரும் முட்டுக்கட்டை என்பதை மக்கள் உணராதவரை நம்நாடு அபிவிருத்தி அடையாது

    ReplyDelete

Powered by Blogger.