Header Ads



பதுரலியாவில் பாடசாலைக்கருகில் குண்டுகள் - குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியின்மையை உருவாக்க சூழ்ச்சி

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியின்மை உருவாக்கும் வகையில் சூழ்ச்சிக்கார கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று -24- காலை பதுரலிய பாடசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளின் பின்னணியிலும் இந்த கும்பலே செயற்பட்டுள்ளது.

பதுரலிய பாடசாலையில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் இவர்களால் கைக்குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையை நடத்தி செல்வதனை தடை செய்வதற்கு அல்லது அரசியல் இலாபம் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுகளை வெடிக்க வைக்க வேண்டும் என்றால் அதனை ஒன்றாக சேர்த்து வைத்து வெடிக்க முடியாது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது குண்டுகளை அவதானித்து குழப்பம் அடைய வேண்டும். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டு பாடசாலையை மூட வைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

மீண்டும் பாடசாலையை மூட வைப்பதற்காக சிலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள பதுரலிய பாடசாலையில் இன்று காலை 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலுக்கமைய இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.