Header Ads



முஸ்லிம்கள் மீதான வன்­மு­றைகள், அவர்­களை வேறு திசைக்கு தள்­ளி­வி­டலாம் - பேரியல் அஷ்ரப்

முஸ்லிம் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றைகள், நெருக்­க­டிகள்  அவர்­களை வேறு திசைக்கு தள்­ளி­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் இடம்­பெற்ற சம்­ப­வத்­துடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் சந்­தேகக்கண்­கொண்டுபார்க்­கக்­கூ­டாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார்.

முஸ்லிம் சிவில் அமைப்­பினால் இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் ஏற்­பா­டு­செய்­யப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்ற மறு­தி­னமே பாரிய இன­மோதல் ஒன்று ஏற்­ப­டுமா என்ற அச்சம் ஏற்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­ட­கையின் வழி­காட்டல் மூலம் அவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெ­றாமல் தடுக்­கப்­பட்­டது. என்­றாலும் எது இடம்­பெ­றக்­கூ­டாது என்று அனை­வரும் பிரார்த்­தித்­தோமோ அது தற்­போது தலை­தூக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இத­னை­யிட்டு  கவ­லை­ய­டை­கின்றேன்.

முஸ்லிம் சமு­கத்­துக்குள் இவ்­வா­றான  பயங்­க­ர­வா­திகள் இருந்­த­தை­யிட்டு ஆச்­ச­ரி­ய­ம­டைந்தேன். அதுவும் அர­சியல் ரீதியில் நான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அம்­பாறை மாவட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் பயங்­க­வா­திகள் குடி­கொண்­டி­ருந்­துள்­ள­தாக கேள்­விப்­பட்­டதும் மிகவும் வியப்­பா­கவே இருந்­தது. அர­சியல் ரீதியில் எங்­க­ளுக்குள் முரண்­பா­டுகள் இருந்­தி­ருக்­கின்­றன. ஆனால் பயங்­க­ர­வா­திகள் உரு­வா­கு­வார்கள் என்று நினைத்தும் பார்க்­க­வி்­லலை.

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்­துப்­பார்க்க கூடாது. ஒரு­சிலர் செய்த இந்த காரி­யத்­தினால் முஸ்லிம் சமுகம் இன்று பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது.தற்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சில அடிப்­ப­டை­வா­திகள் ஆரம்­பித்­தி­ருக்கும் வன்­மு­றை­யா­னது வேறு பீதியை ஏற்­ப­டுத்தி  வரு­கின்­றது. பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நெருக்­க­டிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கையால் சாதா­ரண முஸ்லிம் மக்­களும் பயங்­க­ர­வா­தி­களின் பக்கம் தள்­ளப்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் அந்த இடத்­துக்கு முஸ்லிம் மக்­களை தள்­ளி­வி­ட­வேண்டாம் என்று கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அத்­துடன் இந்த பயங்­க­ர­வாத அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை தோற்­க­டிப்­ப­தற்கு நாங்கள் அனை­வரும் இலங்­கை­யர்­க­ளாக ஒன்­றி­ணைந்து போரா­ட­வேண்டி இருக்­கின்­றது என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.