Header Ads



ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போதே, முஸ்லிம்களுடைய சொத்துக்கள் தாக்கியழிப்பு


நீர்கொழும்பில் ஊரடங்கும் சட்டம் அமுலில் இருந்தபோதே, முஸ்லிம்களுடைய உடமைகளுக்கும் அவர்களுடைய வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் காடையர் கூட்டத்தினால் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நீர்கொழும்பில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தாத நிலையில், ஊரடங்குச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு  முஸ்லிம்கள் வீடுகளுக்குள் முடங்கவே, அதனை சாகமாக்கிக்கொண்ட வன்முறையாளர்கள் வீதிகளில் குழுமி முஸ்லிம்களுடைய சொத்துக்கள் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

சில பகுதிகளில் முப்படையினர் பார்த்திருந்த நிலையிலேயே, வன்முறையாளர்கள் தாக்குதல்களில் பங்கேற்றுள்ளனர்.

நீர்கொழும்பின் சில பகுதிகளில் தமது வீடுகளின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் வீடுகளுக்கு வெளியே நின்றபோது அவர்களை உள்ளே செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர். அப்படியே முஸ்லிம்கள் தமது வீடுகளுக்குள் உட்புகுந்தவுடன் அந் த வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.