Header Ads



பள்ளிவாசல் நிர்வாகிகளே, அனைத்துக்கும் பொறுப்பு - கடிதம் மூலம் அறிவிப்பு

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வக்குப் சட்டம் என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய, அவற்றின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் பொறுப்பாளர்கள் முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹாலிம் தெரிவித்துள்ளார்.

அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு, முஸ்லிம் விவகார அமைச்சினால் பள்ளிவாசல்களுக்கு குறித்த கடிதம் ஊடாக சில ஆலோசனைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அடிப்படைவாதத்தை ஊக்குவித்தல் அல்லது பிரசாரப்படுத்தல் என்பனவற்றைத் தவிர்த்தல், எந்தவொரு குழுவிற்கும் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்காதிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுமாயின், வக்குப் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் அவசரகால சட்ட ஏற்பாடு என்பன உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ், பொறுப்பாளர் சபை முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஜும்மா தொழுகைகள் மற்றும் ஏனைய போதனை நடவடிக்கைகள் என்பனவற்றை காணொளியாக பதிவிட்டு, முஸ்லிம் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. காபிர்களுக்கு இருக்கும் மத சுதந்திரமாவது முDலிம்களுக்கு இல்லை. இதெல்லாம் அடிப்படை உரிமைகள் மீரல்கள்.

    ReplyDelete
  2. அமைச்சர் அவர்களே ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளிவாசலுக்கு மேல் அனுமதி வழங்குவதை நிறுத்துங்கள்,மேலதிக பள்ளிகளை மூடுங்கள் அதான் ஒலி சத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள், முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அரபிகளின் உடையணிவதை தடை செய்யுங்கள் குறிப்பாக மூக்கோடும் வயதில் உள்ள சிறுவர்களும் மதரசாக்களுக்குச்செல்ல இந்த உடைகளையே அணிவிக்கப்படுகின்றனர். விவாக விவாக ரத்துச் சட்டத்தை தற்காலத்துக்கேற்ப நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுவுங்கள் பொதுவாகவே இஸ்லாமிய கல்விமான்கள் கொண்ட சபையொன்றினை அமைத்து அவர்களில் பெரும்பாலானோர் கருத்தினை நடைமுறைப்படுத்துங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.