Header Ads



உலமா சபை அறி­விக்கும் தினத்­தி­லேயே, பெருநாள் திடல் தொழு­கைக்கு அனு­மதி

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை­யினால் நோன்பு பெருநாள் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் தினத்தில், காத்­தான்­குடி கடற்­க­ரையில் ஒரு தரப்­புக்கு மாத்­திரம் பெருநாள் திடல் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தென காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரி­வித்தார்.

எதிர்­வரும் நோன்புப் பெருநாள் தொழுகையை காத்­தான்­குடி கடற்­க­ரையில் நடாத்­து­வது தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று காத்­தான்­குடி நக­ர­சபை மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்­றது.

காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.ஹாறூன், செய­லாளர் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன செய­லாளர் மௌலவி எம்.எஸ்.றமீஸ் ஜமாலி உட்­பட காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி நகர சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது காத்­தான்­கு­டியில் எதிர்­வரும் நோன்புப் பெருநாள் தொழுகை காத்­தான்­குடி கடற்­க­ரையில் நடாத்­து­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு ஆலோ­சனை செய்­யப்­பட்­டது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யினால் நோன்புப் பெருநாள் தினம் பற்றி அறி­விக்கும் தினத்தில் காத்­தான்­குடி கடற்­க­ரையில் ஒரு தரப்­புக்கு மாத்­திரம் பெருநாள் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தென இக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை, காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம், காத்­தான்­குடி நக­ர­சபை என்­பன இணைந்து இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக காத்­தான்­குடி நக­ர­சபை தவி­சாளர் எஸ்.எஸ்.அஸ்பர் தெரி­வித்தார். அத்­துடன் இத்­தீர்­மா­னத்தை மீறி வேறு இடங்களில் பிறிதாக தொழுகை நடாத்த முற்படுவோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டா தெனவும் இதற்கு கட்டுப்படாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

VIDIVELLI

7 comments:

  1. சிறந்த முடிவு இம்முறை அனைத்து Muslim கலும் ஒரே நாளில் பெரு நாளை கொண்டாட வேண்டும்.வேறு வேறு தினங்களில் குழுக்கள்,குழுக்களாக பெரு நாள் கொண்டாடித்தான் எமது சமூகம் அவர்களிடம் காட்டிக் கொடுத்தோம்.இதை அனைத்து ஊர்களிலும் பின்பற்றவும்.

    ReplyDelete
  2. உலமா சபை பிறை பார்ப்பதோடு நிருத்திற்கொண்டால் போதும் என நினைக்கிறன்.

    ReplyDelete
  3. இனி உலமா சபை தான் இஸ்லாத்தை தீர்மானிக்கும்.

    ReplyDelete
  4. Excellent decision. Our community is needed unity

    ReplyDelete
  5. நல்ல யோசனை ஏனைய சபைகளும் பின்பற்றலாம். வேறு நாட்களில் தொழுபவர்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம். பறைசாற்றத் தேவையில்லை.

    ReplyDelete
  6. First of All send all ACJU old team home and Appoint a new team and unite all Muslims under it. (Shameful Old ACJU commity)

    ReplyDelete
  7. இனியேனும் கண்ட பிறையை மூடி மறைக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.