Header Ads



தனது கையடக்க தொலைபேசியில், சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த பெண் கைது

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையில் கோட்டை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அறிவிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

No comments

Powered by Blogger.