முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் திட்டமிடப்பட்ட, இனக் கலவரங்களுக்கு பின்னால் இருப்பது யார்...?
- Fauzer Mahroof -
தற்போது இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் திட்டமிடப்பட்ட இனக் கலவரங்களுக்கு பின்னால் மகிந்த + கோத்தபாய கும்பல் உள்ளது.
ஈஸ்தர் தாக்குதலின் மூலம் உள் நாட்டில் , இலங்கையின் தேச? பாதுகாப்பை முன் நிலைப்படுத்தி அதிகாரத்திற்கு வர இக்கும்பல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை பாவிக்கிறது.
சிங்கள பௌத்த தேசத்தின் நவீன வரலாற்று துட்டகைமுனுக்களாக இவர்கள் தம்மை நிலை நிறுத்துகின்றனர். ஈஸ்தர் தாக்குதலின் உள் நாட்டு சூத்திரதாரிகளை போசித்து, நிதியளித்து, இலக்குகளை தெரிவு செய்து , இந்தக் குரூர கொலையாளிகளை தாக்குதல் நடாத்த அனுமத்தித்ததன் மூலம், பின்விளைவாக எழும் சூழலை எப்படி தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற திட்டமும் அவர்களிடம் இருந்திருக்கிறது என்பது தெளிவு.
அடங்கி இருந்த சூழலை, தமது தேர்தல் மாவட்டமான குருணாகலையில் இருந்தே நேற்றில் இருந்து இந்தக் கும்பல் தொடக்கி வைத்தது. இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் என சொன்ன போது, மகிந்த நாளை குண்டு வைக்கப் போகிறார்கள் என சிங்கள மக்களை நோக்கி சொல்லி, அவர்களை கொதி நிலைக்கு கொண்டு வந்தது இங்கு கவனிக்கத்தக்கது.அத்துடன் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ராசிக் பிரிவினருக்கு , தமது அரசாங்கமும் புலனாய்வுப் பிரிவும் பணம் கொடுத்து ஊட்டி வளர்த்த கதையும் மகிந்தவே ஏற்றுக் கொண்ட விடயமாகி விட்டது.
மகாராஜாவின் மும்மொழித் தொலைக்காட்சி ஊடகம் யாரை பதவிக்கு கொண்டு வர பிரச்சாரம் செய்கிறது... அதற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை என்ன எனத் தெரியாமல் நாம் இருப்பது அரசியல் அறிவீனம் .
என்ன நடக்கிறது? இதற்கு பின்னால் உள்ள உள்னாட்டு சக்திகள் யார்? வெளி நாட்டு சக்திகள் யார் என்பது அவர்கள் இதன் மூலம் பெறப்போகும் அரசியல் , பொருளாதார அதிகார நலன்கள் மூலமாக நமது கண்ணுக்கு முன் தெரியும் உண்மைகளாக இருக்கும்... இந்த மகிந்த - கோதா கும்பலை ஆதரிக்கும் கொஞ்சப் பேருக்கு விளங்கும் ஆனால் சுணங்கும்... அல்லது இறுதி வரை விளங்காமலே போகும்.
நீங்கள் இப்படி சொல்கிறீர்களே... அதிகாரத்தில் மைத்திரி- ரணில் போன்றவர்களின் அரசாங்கம்தானே இருக்கிறது என கேட்கலாம்.... ஆனால் இந்த அரசாங்கம் என்பது வெறும் பெயரளவானது.. இந்த இருவருமே வேலைக்காகாத சுத்த கம்மணாட்டிகள்... அரசாங்க நிர்வாகத் துறை தொடக்கம், இராணுவம் , போலிஸ் , மற்றும் ஏனைய படைத்துறை , உளவுத் துறை வரை ஆழ செல்வாக்கும் கட்டுப்பாடும் கோதாவிடமே இன்றும் இருக்கிறது.
இந்த ஈஸ்தர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் முன் கூட்டியே கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தடுத்தும், மறைத்ததும் யார் ? என்கிற கேள்விக்கான பதிலிலியே எல்லாம் தங்கியுள்ளது.
இன்று கோதா + மகிந்தவின் அதிகாரத்திற்கான வேள்வித் தீயில் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு பலி கொள்ளப்பட்டு வருகிறது.
All are dogs. if it's continue we have only way take weapon to protect our ummah
ReplyDeleteமுதலில் கயவன் ராசிக்கை கண்ட இடத்தில் Muslim களே அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
ReplyDeleteabsolutely correct.....
ReplyDeletethis article is a joke. lets blame rajapakshes for everything. our muslim leaders are with the unp government. what have they done to help us in this situation. they are holding media shows and aggravating the situation.
ReplyDeleteVery true they're the elements behind of this plot
ReplyDelete100% உண்மையான ஆய்வுக்கருத்து. கோத்தாவின் பயங்கர வாதத்துக்கு எதிரான ஆய்வுகள் சர்வதேச தொடர்புகள் நடவடிக்கை எல்லாமே முஸ்லிம் தரப்பு தீவிர வாதிகளின் தாக்குதலை அனுமதிப்பது அதன்பின் அதனைச் வகாபிகளை தேடி தேடி அழிப்பது என்பதாகும். இதை 2014ல் இருந்தே சொல்லி வருகிறேன்,. காபிர் பட்டம் பெற்றதுதான் மிச்சம்.
ReplyDeleteMahinda,Patali champakka,Hiru media,Extrims monks include Bodu balusena,Amith gangs as well their much politicians.
ReplyDeleteதாக்குபவர்கள் மஹிந்த கோட்டாவின் ஆட்கள் என்றால் பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பு யார்? மடத்தனமாக பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். ஐ தே கவின் வழமையான பாணி இது
ReplyDeleteArea ranilukku shoottha kodu
ReplyDeleteபுத்தி ஜீவிகள் இதன் உண்மைத்தன்மையை புரிந்தால் சரி.முஸ்லிம்களின் ஒரே ஆயுதம் துஆதான்.பள்ளிவாசலோடும் அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும் அதிக நேரத்தினை ஒதுக்குங்கள்.யா அல்லாஹ் உனது வீடும் உன் வார்த்தைகளும் எரிக்கப்படுகிறது.நீயே இவர்களை கவனித்துக் கொள்.
ReplyDeleteI think best solution for the problems Muslims are undergoing is to make Gota the president of Sri Lanka. Muslims feel safe under him. Muslim community is loosing confidence in Ranil. Same what happened in India, during the Congress govt. Communal violence was order of the day. BJP came to power, everything came to an end. Not that because BJP was powerful. They were the perpetrators. Sri Lanka is not capable in fighting with ruffians and hoodlums. This predicament for the Muslims is for the reason we voted for Maithri. It was then planned by the Mahinda clan to take Muslims for a task. little by little they are implementing their agenda. Some Muslim and sinhalese organizations are used as cannon fodder. So we Muslims should understand if we can't fight, we join. Ranil has been repeatedly proved he is not a person to raise to occasion. Muslims think well. Decide soon...
ReplyDeleteAllah will never let these culprits come to power.They are trying to strike the iron while it is hot.Mills of God grind slow but sure.
ReplyDeleteMUSLIMS WITHOUT LIVING ISLAMIC LIFE,Y U BLAME OTHERS,THERE ARE NO FOOLS,TO HEAR WHAT U SAY.ALL ARE TJ.MEANING, TATKOLAI JAMAATH.
ReplyDeleteIt's 100% true.
ReplyDeleteஎல்லா தவறுகளுக்கும் அடுத்தவனை கைகாட்டி விட்டு தான் என்னவோ அப்பாவி போல் வேடம் போடுவது இலங்கை முஸ்லிம்களின் கபடத்தனம்.
ReplyDeleteஇலங்கையில் நீங்கள் எந்த சமூகத்துடனாவது நல்லிணக்கத்துடன் நடக்கிறீர்களா? குரானில் சொல்லி விட்டார்கள், அதனால் நாங்கள் இப்படித்தான் இருப்போம், ஏனையோர் எங்களுக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று ஒருவித மிதப்புடன் தானே நடக்கிறீர்கள்? உங்களிடம் விளையாடும் அரபுநாட்டு காசுக்கு சில சந்தர்ப்ப வாதிகள் துணை போவதால் எல்லோரும் அப்படிதான் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.
எந்த சந்தர்ப்பவாதியும் எதிராளியின் பலவீனத்தை தான் முதலில் பயன்படுத்தி கொள்வான். முதலில் முஸ்லிம்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். "தீவிரவாத கருத்துள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய மத தலைவர்களால் தான் சரியான வழிகாட்ட முடியும், வேறெந்த மதத்தவராலும் முடியாது" என்று மஹிந்த ராஜபக்ஷ சொல்லியது 100% உண்மை. முதல் தவறு உங்களிடம் தான் உள்ளது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் முஸ்லிம்கள் இது தெரியாததை போல் நடிப்பதை நிறுத்தும் வரை இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் எங்கேயும் விமோசனம் கிடைக்காது.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
யார் தவறு செய்தாலும் ஏன் இந்த ராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அரசு ஏன் தண்டனை கொடுக்க மறுக்கின்றது காரணம் என்ன…..மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றது .
ReplyDeleteLTTE அமைப்பை உருவாக்கியது போன்று இன்னும் ஒரு அமைப்பையும் உருவாக்க நாடுகின்றது இந்த பௌத்த இனவாத கூட்டம்.
தமிழ் பேசும் ஹிந்து மக்களுக்கு நடந்தது போன்று இன்று முஸ்லிம் மக்களுக்கு நடந்து வருகின்றது தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமை னாலேயே LTTE இயக்கம் ஆரம்பம் ஆனது இப்பொழுது முஸ்லிம்களையும் அதே நிலைக்கு ஆளாகின்றார்கள் இந்த பவுத்த இனவாதிகள், இதற்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எந்த இனவாதத்தையும் தூண்டி விடாமல் இருப்பதற்கு.....