Header Ads



ஜாமிஆ நளீமிய்யா குறித்து எடுத்துரைப்பு, முழு திருப்த்தியடைந்த சபாநாயகர்

- AAM. ANZIR -

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் குறித்து, தாம் முழு திருப்த்தியுடன் இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் முஸ்லிம்களில் சிலர், சபாநாயகருக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் குறித்து சில தவறான தகவல்களை வழங்கியிருந்தனர்.

இதுகுறித்து வீடியோ ஒளிப்பதிவும் வெளியாகியிருந்து. இது முஸ்லிம் சமூகத்தில் சில சலசலப்புகளையும் உருவாகியிருந்தது.

இந்நிலையில் சபாநாயகரை அவசரமாக சந்தித்து, இதுபற்றிய தெளிவை வழங்க முஸ்லிம் பிரமுகர்கள் தீர்மானித்தனர்.

அதனடிப்படையில் சபாநாயகரை சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள், ஜாமிஆ நளீமிய்யா பற்றிய முழு விபரத்தை சபாநாயகருக்கு தாராளமாக வழங்கினர். நளிமிய்யாவில் கற்று தற்போது உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுனர்.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் குறித்து தம்மிடம் எந்தவிதமான தவறான பார்வைகளும் இல்லையென இதன் இறுதியில் சபாநாயகர் பதிலுரைத்ததை அடுத்து, இச்சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

2 comments:

  1. All along the history of Islam,, Munaafiqs are found living with muslims and harm the Islam and Its people.

    This is not new but from the time to Rashoolullah to date.

    This is the same reason, till today Palestine people are losing form our common enemy and land thieves in that soil.

    May Allah give them guidance.. if they do not have guidance may Allah destroy them for this kind of low grade works.



    ReplyDelete
  2. காட்டிக் கொடுத்தவர்கள் அடையாள முஸ்லிம்களாக இருப்பார்கள். ஜுப்பா சால்வை போட்டு கத்னாவும் செய்தால் முஸ்லிம்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள். முதலில் மனிதர்கள் அடுத்து முஸ்லீங்கள் என வாழ்ந்து காட்டுவோர் நழீமீக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.