முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன், அரசியல் முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு - உடன் நடவடிக்கைக்கு ரணில் உத்தரவு
வடமேல் மாகாணம் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதுடன் அதன் பின்னணியில் சில சில அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்டுள்ள கிடைத்துள்ள புலனாய்வு தகவல் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வன்முறைகளுடன் தொடர்புடைய சகலருக்கு எதிராக தகுதி தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது சம்பந்தமான புலனாய்வுப்பிரிவின் அறிக்கை ஜனாதிபதி செயலகம், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
very appropriate photo for this news, he will do nothing.......
ReplyDeletePut Them all inside under Emergency Law. No Excuse for politician. They are also SriLankan Citizen. Law is for all...
ReplyDelete