கண்டியில் ஒரு முஸ்லிம் வைத்தியர் 6000 பெண்களை மலடாக்கியுள்ளார் - இனவாதம் கக்கும் SP. திசாநாயக்கா
குருநாகல் டாக்டர் ஷாபி , சிசேரியன் சத்திரசிகிச்சை என்ற போர்வையில் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அந்தப் பிரச்சினை கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் எஸ். பி.திசாநாயக்க எம் பி .
செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி , பேராதனை வைத்தியசாலையில் பணிபுரிந்து இப்போது மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்று சென்ற சிராஜ் என்ற டாக்டரும் இன்னுமொரு பெண் டாக்டரும் சுமார் 6 ஆயிரம் பெண்களை மலடாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இப்படியாக பேராதனை பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாட்டை செய்ய முன்வரவேண்டுமெனவும் எஸ் பி கோரிக்கை விடுத்தார்.
Patta modaya
ReplyDeleteI think in No more Gaenocologist other than a small number of muslims
ReplyDelete