Header Ads



இரத்தம் படிந்த குழப்பங்களை பார்த்த, ஜே.வி.பியினருக்கு வன்செயல் என்பது கைவந்த கலை - ஹரீஸ்

ஜே.வி.பியினருக்கு வன்செயல் என்பது கைவந்த கலை என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கல்முனை பிரதேச செயலக பிரச்சினையானது தமிழ், முஸ்லிம் வன்செயலுக்கு கொண்டு சென்றுவிடும் என்று ஜே.வி.பியினர் பேசியுள்ளனர்.

உண்மையில் ஜே.வி.பியினருக்கு வன்செயல் என்பது கைவந்த கலை. இரத்தம் படிந்த குழப்பங்களை பார்த்தவர்கள்.

அப்படி இருக்கின்றவர்கள் கல்முனையின் வரலாறு தெரியாமல் அங்கு ஒற்றுமையாக இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.