மன்னிப்பு கேட்டு, தவறுக்கு வருந்துகிறோம்
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தெமட்டகொடை வர்த்தகர் இப்றாஹீம் என்பவர் மரணித்துவிட்டதாக எமது இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.
கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த செய்தியை பதிவேற்றினோம்
எனினும் அந் த தகவல் தவறானது என பின்னர் அறிந்து கொண்டோம். இதையடுத்து குறித்த செய்தியை உடனடியாக நீக்கி விட்டோம்.
எனினும் குறித்த செய்தி தொடர்பில் ஏற்பட்ட, துயரங்களுக்காக வருந்துகிறோம்.
வர்த்தகர் இப்றாஹீம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வாசகர்களிடம் இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
செய்திகளை தீர விசாரித்து அறிவிப்பது மன்னிப்புக் கூறுவதை விட அதிகம் சிறந்தது.
ReplyDeleteYou are great but too late.
ReplyDelete