இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை
காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.
எனவே இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இரத்த குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாகவும் தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.
Post a Comment