Header Ads



மதுபோதையில் விகாரைக்குள் புகுந்து, பிக்கு மீது தாக்குதல்

மது போதையில் விகாரைக்குள் புகுந்து விகாரையிலிருந்த தேரர் மற்றும் தேரருக்கு சேவை புரியும் ஊழியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்திய அண்ணன், தம்பி இருவரையும் இன்று (15) ராஜாங்கன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜாங்கன யாய 18 ஆம் பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான தேரர் மற்றும் ஊழியர் ஆகியோர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபோதையில் விகாரைக்குள் நுழையும் போது தடை விதித்தமையே தாக்குதல் நடாத்த காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


No comments

Powered by Blogger.