குண்டுவெடிப்பு குறித்து, ஹரீன் சொல்லியுள்ள புதிய விசயம்
தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தவிருந்ததாக முன்னதாக இன்று காலை வெளிவந்த ஆவணங்கள் போலியானவை என்று சொல்லப்பட்டாலும் அந்த ஆவணங்களை இப்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ.
தாக்குதல் நடத்தப்படலாமென புலனாய்வு அதிகாரிகளால் தனது தந்தையார் அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் கொழும்பு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இதனை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். TN
Post a Comment