Header Ads



ரணிலை விரட்ட முயற்சி - ஹில்டன் ஹோட்டலில் பிரபல அமைச்சர்கள் நடத்திய சந்திப்பு


ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க பாரிய சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவியை பெற்றுக் கொள்வதற்காக பிரபல அமைச்சர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பிரபல அமைச்சர்கள் சிலருடன் இந்த சூழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்காக பாரிய அதிகார போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய, நவீன் திஸாநாயக்க ஆகியோர் தலைமைத்துவத்தை பெற்றுகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. ....நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
    (அல்குர்ஆன் : 2:216)

    ReplyDelete
  2. இவனுங்கலுக்கு வேர வேலைய இல்லையா? ஒவ்வொரு மாதமும் ஒரு சூழ்ச்சி இதல்லாம் மக்களை முட்டாளாக்கி அவர்களின் வங்கி கணக்கை நிரப்புவதுதான் முக்கிய நோக்கம்.இவை அனைத்தும் அவர்கள் அனைவரும் எமக்கு காட்டும் நாடகங்கள்

    ReplyDelete

Powered by Blogger.