குண்டுவெடிப்புக்கள் அரசியல் நோக்கங்களுக்காக, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன - மனோ கணேசன்
வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மீண்டும் மீண்டும் நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment