Header Ads



உணவு பரிமாறும் போது, வெடித்துச் சிதறிய குண்டுதாரி

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி, சினமன் கிரான்ட், ஷங்ரி-லா விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்திருந்தன.

இந்தக் குண்டுவெடிப்புகளால் மேற்படி விடுதிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து. கொழும்பு நகரில் உள்ள பல ஐந்து நட்சத்திர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெரும்பாலான விடுதிகளின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உணவு பரிமாறும் போது வெடித்துச் சிதறிய குண்டுதாரி

சினமன் கிரான்ட் விடுதியில் நேற்று காலை உணவு வேளையில் வரிசையின் நின்ற போதே, குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கோப்பையுடன் வந்த அந்த நபருக்கு உணவு பரிமாறப்படும் போதே அந்த நபர் வெடித்துச் சிதறினார்.

அந்த நபரின் உடல் துண்டு துண்டாக கிடந்த நிலையில், காவல்துறையினர் எடுத்துச் சென்றதாக, விடுதி அதிகாரி ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.