Header Ads



ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தீவிர அரசியலில் பங்கேற்பேன்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது தீவிர அரசியலுக்குத் திரும்பிவரப் போவதாகக் தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் திரும்பி வருவதற்குத் தயாராக இருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்தத் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து எவருடனும் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

No comments

Powered by Blogger.