Header Ads



குருநாகல் மாவட்ட சு.க. அமைப்பாளர் லத்தீப், உட்பட பலர் ஐதேக.யில் இணைவு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஏ. லத்தீப் உட்பட அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்னிலையில் அவர்கள் அந்த கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

இவர்களில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடங்கஸ்லந்த பிரதேச சபைக்கு போட்டியிட்ட 21 வேட்பாளர்களும் அடங்குகின்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட லத்தீப்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட அணியினர், கட்சியினர் நோக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு, அதிகார ஆசை கொண்ட அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு வருவதால், கட்சியின் உறுப்பினர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உட்பட அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்ப மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தடையேற்படுத்தி, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதை தான் உட்பட தமது அணியினர் நிராகரிப்பதாகவும் இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்ததாகவும் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது உறுப்பினர்கள் அனாதரவாக்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இலங்கை இஸ்லாமிய சமுதாயமே,, பாசிச ரணில் அரசை வீழ்த்த தயாரா...?

    Noor Nizam

    Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. We do not rally behind Mahinda & Co.......

    ReplyDelete

Powered by Blogger.