Header Ads



மாகாண தேர்தலை நடத்தினால், அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் - இதனால் ஒரு வருடத்துக்கு தேர்தலை நடத்த மாட்டார்கள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார். 

இதன்காரணமாக மேலும் ஒரு வருடத்துக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

ஹட்டன், நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இன்று எந்தவொரு மாகாண சபைகளும் இல்லை. இன்று மாகாண சபைகளின் அதிகாரம் இருப்பது ஆளுநர்களின் கையிலே என்று மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.