Header Ads



கஞ்ஜிபான இம்ரானிடமிருந்து வெளியாகும் முக்கிய, தகவல்களை வெளியிட வேண்டாமென அழுத்தம்

மதூஸின் நெருங்கிய சகாவான கஞ்ஜிபான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என  உயர் மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதூஸ் டுபாயில் இருக்கும் போது சில அரசியல்வாதிகள் டுபாய் சென்று அவருடன் விருந்துபசாரங்களிலும் கலந்துகொண்டுள்ளமை இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மதூஸுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் பலர் குறித்தும் இம்ரானிடமிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயர் மட்ட அழுத்தங்களினால், எதிர்காலத்தில் மகாந்துரே மதூஸ் மற்றும் கஞ்ஜிபான இம்ரான் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள், இருட்டடிப்புச் செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இன்றைய சகோதார தேசிய நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குற்றச் செயல்களுடன் உள்ளவர்களை சிறைப்படுத்துவதுடன் மாத்திரம் விசாரணைகள் நிறைவடையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.  

2 comments:

  1. இவர்கள் விடயத்தில் நெருப்பு போல இருந்த எமது ஜனாதிபதிக்கு என்னவாயிட்டது.எல்லாமே நாடகங்கள்

    ReplyDelete
  2. @Rizard, இவருதான் உங்க தலைவர்

    ReplyDelete

Powered by Blogger.