வைத்தியர் போன்று வேடமிட்டு, சுற்றித் திரிந்த யுவதி கைது
வைத்தியர் போன்று வேடமிட்டு எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சுற்றித் திரிந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு நோயளர்களுடன் இணைந்து இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
காலி, பிலான பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வைத்தியர் போன்று வேடமிட்டு பாட்டியின் தோழி ஒருவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த எல்பிட்டிய வைத்தியசாலையில் நடமாடிக் கொண்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன்போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Post a Comment