Header Ads



இலங்கையர்கள் அடங்கலாக 558 பேர் துருக்கியில் கைது

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 558 பேரை துருக்கி இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (12) வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த குழுவில் இலங்கையர்கள் உட்பட பாகிஸ்தான், பங்களாதேஸ், மொரோக்கோ, டியுனிஸியா, ஈரான், ஈராக், பலஸ்தீன், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாட்டவர்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு பிரதான பாதையாக மனித கடத்தல்காரர்கள் துருக்கியைப் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தற்பொழுது பல முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுவரை எந்தவித உத்தியோகபுர்வ அறிவித்தலும் விடுக்கபடாதுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.   

No comments

Powered by Blogger.