ஒரே நேரத்தில் 27 இடங்களில் தாக்குதல், நடத்த திட்டமிடப்பட்டமை அம்பலம்
குண்டுவெடிப்பு சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 500 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு கேந்திரநிலையங்கள் உட்பட 27 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுவரை சந்தேகத்தின் பேரில் 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான திட்டங்கள் தெமட்டகொட வீட்டில் இருந்தே தீட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து புறப்பட்டதாக சொல்லப்படும் இரண்டு பைக்குகள் குறித்து விசாரணைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
தெஹிவளை சென் மேரிஸ் ஆலய தாக்குதலுக்கு வந்த தற்கொலைதாரி அங்கு பொலிஸ் இருப்பதை கண்டு திரும்பிச் சென்று தற்கொலை அங்கியை தான் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்துக் கழற்றும்போதே அது வெடித்திருக்கலாமென பொலிஸார் கருதுகின்றனர். தெஹிவளையில் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர். tn
Post a Comment