ஒக்டோபர் 21 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் - மாகாணத் தேர்தல் இவ்வருடம் நடக்காது
மாகாணசபை சட்டத்தில் உரிய நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், இந்த வருடத்துக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்த விடயத்தை மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்த தகவலை பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டுமானால், ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தலுக்கான மாற்று ஏற்பாட்டு சட்டங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இந்நிலையில் ஒக்டோபர் 21ம் திகதியன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதால் இந்த வருடத்துக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தமுடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சபாநாயகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
Post a Comment