Header Ads



IPL ஐ, தூக்கி வீசினாரா மலிங்கா..?

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஐபிஎல் தொடரின் மும்பை அணி விளையாடும் முதல் ஆறு போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இன்று -23- துவங்குகிறது.

இதில் முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை வீர்ர் மலிங்கா முதல் ஆறு போட்டிகளில் விளையாடாமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட ஐபிஎல் சீசனில் மூன்றில் ஒரு பங்கு போட்டிகளில் மட்டுமே மும்பை அணிக்காக ஆட முடியும் எனவும் மீதமுள்ள போட்டிகளுக்கு தான் இருக்க முடியாது.

இலங்கை அணிக்காக ஆட செல்வதாக மலிங்கா குறிப்பிட்டு விட்டு தனக்கு மாற்று வீரரை தேடிக் கொள்ளுமாறு மும்பை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

ஏனெனில் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல்11 வரை சூப்பர் மாகாணத் தொடரானது இலங்கையில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வேண்டும் என்றால் இந்த தொடரில் இலங்கை வீரர்கள் கட்டாயம் பங்குபெற்று தங்க திறமையை நிரூபிக்க வேண்டு என்ற கெடுபிடி இருப்பதால், மலிங்கா இலங்கை திரும்பவுள்ளார்.

முதலில் ஐபிஎல் தொடருக்காம டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றதாக கூறப்பட்ட மலிங்கா, தற்போது இலங்கை அணிக்காக ஐபிஎல் தொடரை தூக்கி வீசியுள்ளார் என்றே கூறலாம்.

No comments

Powered by Blogger.