Header Ads



பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்களை பதிவு செய்­வதே எமது பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­மாக அமையும்

முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ருதி பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை பதிவு செய்­வதே எமது நிரந்­தரப் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­மாக அமையும் எனவும் இன்­றைய காலத்தைப் பொறு­வத்­த­வ­ரை­யிலும்  எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கு­மென்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால்­துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமயம் கலா­சாரம் மற்றும் தபால்­துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் உடு­நு­வர மற்றும் யட்­டி­நு­வர ஆகிய இரு தேர்தல் தொகு­தி­களை ஒன்­றி­ணைத்து நடத்­தப்­பட்ட நட­மாடும் சேவை கடந்த சனிக்­கி­ழமை தவு­ல­கல வஹங்கே  அல்-அ­றபா மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வுக்கு தலை­மை­தாங்கி உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் உரை­யாற்றும் போது மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்­நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைப் பற்றி ஒரு சரி­யான  கவ­னத்தை கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. ஆரம்ப காலங்­களில் இதற்கு அமைச்­சர்­க­ளாக எம். எச். முஹமட்,  எம். எச். எம். அஷ்ரப்,  அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர், அதைத் தொடர்ந்து சில சிங்­கள அமைச்­சர்­மார்­களின் கீழ் செயற்­பட்டு வந்­தது. அந்­தந்தக் காலங்­களில் சூழல் தேவைக்­கேற்ப செயற்­பட்­டது. எனினும், அக்­கால கட்­டத்­தையும் இக்­கால கட்­டத்­தையும் ஒப்­பிட்டுப் பார்க்­கும்­போது இன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மீது பாரிய பொறுப்­பி­ருக்­கி­றது.

இந்­நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் முஸ்­லிம்கள் பல­வி­த­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வாழக்­கூ­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலைமை இருக்­கி­றது.  எனவே இன்­றைய காலத்தைப் பொறு­த்­த­வ­ரை­யிலும் நாங்கள் எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மிகவும் சிறிய இடத்தில் அமைந்­தி­ருந்­தது. இதனை விஸ்­த­ரித்து பெரிய கட்­டிடத் தொகு­தியில் நிர்­மா­ணித்து அதை மாற்­றி­ய­மைத்­துள்ளோம். இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்­கவைச் சந்­தித்து கதைத்த போது அவர் 296 மில்­லியன் ரூபா நிதி உத­வியை வழங்கி அமைச்சின் கட்­டிடத் தொகு­தியை நிர்­மா­ணித்து திறந்து வைக்­கும்­படி கூறினார். அந்த வகையில் அதற்­கு­ரிய கட்­டி­டத்தில்  முஸ்லிம் சமய கலா­சார அமைச்சு இன்று இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

கண்டி மாவட்­டத்தில்  முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் அக்­கு­றணை பிர­தே­சத்­திற்கு அடுத்­த­த­தாக உடு­நு­வரப் பிர­தேசம் திகழ்­கி­றது. அன்­றைய கால­கட்­டத்தில் தங்­க­ளு­டைய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக அலு­வ­லகம் வந்­த­போது இட­வ­ச­தி­யின்மை அன்று காணப்­பட்­டது. ஆனால் அந்த நிலைமை மாறி இன்று ஒரு அழ­கிய தோற்­றத்­தி­லுள்ள கட்­டி­டத்தில் எமது சகல அலு­வ­லக வேலை­களை செய்து கொண்­டி­ருக்­கின்றோம்.

கடந்த காலங்­க­ளிலே எமது பள்­ளி­வா­சல்கள் பல்­வேறு இடங்­க­ளிலும் தாக்­கப்­பட்­டன.  அப்­போது நாங்கள் சொந்த நாட்டில் அநா­தை­க­ளாக இருக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்தோம். இறை­வனைத் தவிர எம்மைப் பாது­காப்­ப­தற்கு இந்­நாட்டில் ஆட்­சி­யா­ளர்கள் எவரும் இருக்க வில்லை.  எமக்கு உதவ எவரும் முன்­வ­ரவும் இல்லை. இப்­ப­டி­யான ஓர் இக்­கட்­டான சூழ்­நி­லை­யி­லேயே வாழ்ந்­தி­ருந்தோம். கடை­சி­யாக நீதி கேட்டு நீதி­மன்றம் சென்ற போது அன்று நீதிமன்­றங்­க­ளிலே எங்­களைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சலா என்­ப­தாகும். துர­தி­ஷ்­ட­வ­ச­மாக அநே­க­மான பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்த அவல நிலையைக் கருத்திற் கொண்­டுதான் பள்­ளி­வா­சல்கள் கட்­டாயம் பதிவு செய்­யப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்றேன். பள்­ளி­வாசல்கள் மட்­டு­மல்ல குர்ஆன் மத்­ர­ஸாக்கள், தைக்காப் பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரிகள் ஆகிய அனைத்­தையும் நாங்கள் பதிவு செய்­து­கொள்ள வேண்டும்.

அக்­கால கட்­டத்தில் பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­வதில் பல சிர­மங்கள் இருந்­தன. அப்­போது பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­வ­தாக இருந்தால் பல­வி­த­மான ஆண­வங்கள் கோரப்­பட்­டன. விசே­ட­மாக அரு­கி­லுள்ள பௌத்த விஹா­ரையின் கடிதம் அப்­போது தேவைப்­பட்­டது.  இப்­படி  பள்­ளி­வாசல் பதிவு செய்­வ­தாக இருந்தால் பல­வி­த­மான ஆவ­ணங்கள் சமர்­பிக்க வேண்டும். இவை அனைத்­தையும் நீக்கி மிக இல­கு­வான முறையில் அந்தப் பள்­ளி­வா­ச­லுக்­கு­ரிய காணி உறு­தி­யி­ருந்தால் மட்டும் போது­மென்ற வகையில் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தற்கு விசே­ட­மான சலு­கை­யினை வழங்கி ஒரு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். ஆனால் எமது சமூகம் இதனைப் பெரி­ய­ளவில் கவ­னத்தில் கொள்­வ­தில்லை என்று அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் கலந்து கொண்டனர்.  25 புதிய பள்ளிவாசல்கள் பதிவு செய்யவும்,  14 புதிய நிர்வாகத் தெரிவை பதிவு செய்யவும், 3 பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.