கென்யாவுக்குப் பறந்தார் மைத்திரி
கென்யாவின் நயிபோர் நகரில் இடம்பெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சூழலியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கென்யாவின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை அங்கு பயணமானார்.
கென்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
‘சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புதிய தீர்வுகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (11) ஆரம்பமான இந்த மாநாடு 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (14) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
உரையை சிங்களத்தில் ஆற்றினால் நாட்டின் பெயரைக் கொஞ்சமாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.
ReplyDelete