Header Ads



ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா, நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்தனர்.

இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குரேஷி கூறுகையில், தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


5 comments:

  1. What is the respect for Cricket rules and regulation. Even a sport which supposed to be played for peaceful friendship purposes,,, They behave like this to ignite tensions..

    This does not suit to sports at all...

    ReplyDelete
  2. Well done Indian cricketers

    ReplyDelete
  3. super Indian cricket team

    ReplyDelete
  4. அட மாட்டு மூத்திரம் குடிக்குற லூசுகளா கவிளையாட்டில் இரானுவத் தொப்பி அணிந்தத பாரட்டும் அளவிற்கு உங்கள் புத்தி மாட்டு மூத்திரத்தால் வெளுத்து விட்டதா? பாரிய யுத்தங்களையே விளையாட்டு நிறுத்தியும் தள்ளிப் போட்டும் உள்ளது அந்த விளையாட்டிலேயே யுத்தத்தைத் புகுத்த நினைத்தவனுகளுக்கு பாரடடுத் தெரிவிக்கும் அளவிற்கு இந்ந மாட்டு மூத்திரம் வழிகாட்டுது இந்த இனவாதிகளை

    ReplyDelete
  5. அட மாட்டு மூத்திரம் குடிக்குற லூசுகளா கவிளையாட்டில் இரானுவத் தொப்பி அணிந்தத பாரட்டும் அளவிற்கு உங்கள் புத்தி மாட்டு மூத்திரத்தால் வெளுத்து விட்டதா? பாரிய யுத்தங்களையே விளையாட்டு நிறுத்தியும் தள்ளிப் போட்டும் உள்ளது அந்த விளையாட்டிலேயே யுத்தத்தைத் புகுத்த நினைத்தவனுகளுக்கு பாரடடுத் தெரிவிக்கும் அளவிற்கு இந்ந மாட்டு மூத்திரம் வழிகாட்டுது இந்த இனவாதிகளை

    ReplyDelete

Powered by Blogger.