இது,, இரத்தினக்கல் இல்லையா...?
பன்னிப்பிட்டியில் கொள்ளையிடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட கல் இரத்தினக்கல்லா என்பதை உறுதி செய்ய முடியவில்லையென தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் கூரே தெரிவிப்பு..
முன்னதாக இந்தக் கல் மதிப்பீட்டிற்காக அதிகாரசபையிடம் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.
மாக்கந்துர மதுஷ் இக்கல்லை கொள்ளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதன்பெறுமதி 500கோடி ரூபா என தகவல் வெளியாகியிருந்தமையும் இதனை பொலிசார் வேடத்தில் சென்ற மதுஷ் அணியினர் கொள்ளையடித்து இதனை 1400 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment