கொள்ளையடித்த பிக்கு - காவி உடையை கழற்றி, மரத்தில் கட்டிவைத்த மக்கள்
கொடகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறி, நிதியுதவியை திரட்டிய பிக்கு ஒருவரையும் சாதாரண நபரையும் கிராம வாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கும் முன்னர் பிரதேசவாசிகள் பிக்குவின் காவி உடையை கழற்றி சாதாரண நபருடன் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
குறித்த பிக்குவும் சாதாரண நபரும் கிராமத்தில் கொள்ளையடிப்பில் ஈடுபட்டதாக கூறி கிராம மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் விகாராதிபதியின் பெயரில் பொய்யான காரணத்தை கூறி, நிதி திரட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post a Comment