Header Ads



மருத்துவ பரிசோதனைக்கு தயார் - முஜிபுர் ரஹ்மான்

போதைப்பொருள் பாவிப்பது தொடர்பாக யாராவது குற்றம் சாட்டினால் அதுதொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு முகம்கொடுக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். எமது சிறிய தவறுகளும் மக்கள் மத்தியில் பெரும் தவறாகவே தெரிகின்றன. அதனால் நாங்கள் சரியாக இருந்தால் மக்கள் எங்களை மதிப்பார்கள் என்றார்.

கொழும்பில் இன்று -20- செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.