மீண்டுமொரு அரசியல், களேபரம் நடக்கப்போகிறது..!
- Siva Ramasamy -
முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதி செய்த விவகாரத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சி ஐ டி மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் விசேட அறிக்கையை கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்.
இந்த பின்னணியில் - வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க பேச்சு நடத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை எம் பிக்கள் அந்த யோசனையை கைவிட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இப்போதிருக்கும் நிலையில் இந்த சதி விவகாரத்தில் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரும் விசாரிக்கப்படலாம் என்ற அச்சமே அதற்கு காரணமாம்.
சரி..டீ ஐ ஜி நாலக்க சில்வா அரச சாட்சியாளராக மாறினால்,
இன்னார் தான் இதன் பின்னணியில் இருந்தாரென விரலை நீட்டினால்,
மீண்டும் ஒரு அரசியல் களேபரம் நடக்கப் போகிறது...
நிலைமை அப்படித்தான் இருக்கிறது..
Post a Comment