சுதந்திர கட்சியை சேர்ந்த சிலர், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் நோக்கத்துடன் உள்ளனர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் நோக்கத்துடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய முயற்சிப்பவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினுள் பிரச்சினையை தோற்றுவிக்கின்றனர்.
அவ்வாறானவர்கள் விரைவாக கட்சியை விட்டு வெளியேறாமல் கட்சியில் இருந்துகொண்டே சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment