Header Ads



திருமண வைபவத்தில் 6 வயது, குழந்தைக்கு பலாத்காரமாக மது

தனது 6 வயது ஆண் குழந்தைக்கு அயல்வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பலாத்காரமான முறையில் மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை - மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர்  காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வீட்டிற்கு விளையாட சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பிய போது அவரின் வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்..

இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.