Header Ads



600 கிலோ ஹெரோயினுடனா, ஈரானிய கப்பல் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டது..?

- Newsfirst -

ஹெரோயின் ஏற்றப்பட்ட ஈரானிய கப்பல் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர், தெற்குக் கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயினுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பலில் சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்தவர்கள் ஹெரோயினின் ஒரு பகுதியை கடலில் எறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.