Header Ads



நாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 50 வீதம் போலியானவை


நாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என் சி விதானகே குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்காகவும் வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் முதல், நடைமுறைப்படுத்தப்படும் வகையில், இலங்கை பிரஜைகளின் தகவல்களை கணினி மயமாக்கவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என் சி விதானகே மேலும் கூறியுள்ளார்.

இதன்படி, பிறக்கும் குழந்தைகளுக்கு இலக்கமொன்று வழங்கப்படுவதுடன், அதனையே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயன்படுத்துவதற்கும், தேசிய அடையாளஅட்டையை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுத்தவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.