Header Ads



யாழ் முஸ்லிம்களுக்கு மாடிவீடு, TNA பச்சைக்கொடி, விரைவில் பணி ஆரம்பம் என்கிறார் றிசாத்

யாழ் முஸ்லிம்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பிரதமர் இதை குறிப்பிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மாடிவீட்டு திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு வழங்கப் போவதில்லை என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் மிகவிரைவில் யாழ் முஸ்லிம்களுக்கு, அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் சற்றுமுன்னர் jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி வீடமைப்பை பெற்றுக்கொள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது சகோதரர் றிப்கான் பதியுதீன், யாழ் மாநகர சபை உறுப்பினர்  நிலாம் , தொழிலதிபர் Raseen Siraj, Mujahid Nisaar ஆகியோர்  குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Why TNA's approval was sought in this matter? Who cares whether they approve or oppose.

    ReplyDelete

Powered by Blogger.