தில்லையடியில் விபத்து - சரூக் முஹம்மது நஸ்திக் வபாத்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில், நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் -தில்லையடி, அரபா நகரைச் சேர்ந்த சரூக் முஹம்மது நஸ்திக் (வயது 20) எனும் இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகரை நோக்கி பயணித்த ஓட்டோ ஒன்று, அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர் திசையில் இருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, ஓட்டோவில் பயணித்த குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போதே, குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-ரஸீன் ரஸ்மின்
Post a Comment