Header Ads



மதுஷ்சை கைதுசெய்த கௌரவம், பாராட்டு லத்தீப்பையே சாரும் - ரஞ்சன் ராமநாயக்கா பாராட்டு

பாதாளக் குழுத் தலைவரும் பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்ட நடவடிக்கைகான கௌரவம், பாராட்டு என்பன பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி லத்தீப்பையே சாரும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் லத்தீப், அவரது குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 25 பேர் நேற்றைய தினம் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஒருவரிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு காணப்படுவதாக டுபாயின் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. By this public statement MP R. Ramanayake has endangered the life of a police officer. This information should have remained a state secret.

    ReplyDelete

Powered by Blogger.