Header Ads



மாகாண தேர்தலை நடத்துவது, பற்றிய கூட்டம் தோல்வி - அவகாசம் கேட்ட ஹக்கீம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில், இன்று -20- சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்தது.

உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென இங்கு வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச - புதிய முறையோ பழைய முறையோ எதுவென்றாலும் பரவாயில்லையென தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள கட்சித் தலைவர்கள் பலர் பழைய முறைப்படி தேர்தலுக்கு செல்வதே நல்லதென குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சில யோசனைகளை முன்வைக்க அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் சிறிது கால அவகாசம் கோரியதால் இன்னும் இரண்டு தினங்களில் மீண்டும் கூடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

1 comment:

Powered by Blogger.