Header Ads



சாராயம் தராமைக்காக வருந்துகிறேன் - பிரதமர் ரணில்

தோட்ட மக்களுக்கு மதுபான போத்தல் தர முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் போது மதுபான போத்தலுக்குப் பகரமாக வீடு தருவதாக கூறினோம். அதனை இன்று நிறைவேற்றுகின்றேன். ஆரம்பத்தில் தோட்ட பாடசாலை, தோட்ட வைத்தியசாலை எனக் காணப்பட்டது. ஆரம்பத்தில் லயன் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யவே அரச நிதி வழங்கப்பட்டது.

இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர்தான் தோட்டப்புற மக்கள் உண்மையான பிரஜாவுரிமை அனுபவிக்கின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஹட்டன் பொகவந்தலாவை வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.