கொகெய்ன் பாவிக்கும் லெப்பேமாரை, பள்ளிவாசல்களிலிருந்து துரத்தியடிக்க வேண்டும் - ரஞ்சன்
‘அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சமயத்தலைவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொகெய்ன் பாவனை செய்யும் முஸ்லிம் சமயத்தலைவர்களான லெப்பேமாரும் இருக்கின்றனர். அவர்கள் பள்ளிவாசல்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட வேண்டும். கொகெய்ன் மற்றும் போதைப்பொருள் பாவனை செய்யும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் விபரங்களை சபாநாயகரிடமும், சி.ஐ.டியினரிடமும் கையளித்திருக்கிறேன்’ என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மாதிவெலயிலுள்ள இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திபொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, ‘பௌத்த மதகுரு ஒருவர் களுபோவில வைத்தியசாலை கழிவறையில் கொகெய்ன் பாவனையில் ஈடுபட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் பாவனை செய்பவர்கள் மத்தியில் இருக்கின்றார்கள். அத்தோடு உயர்பதவி வகிப்பவர்களும் இதில் அடங்கியுள்ளார்கள். விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமென்பதால் அவ்வாறானவர்களின் பெயர்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.
கொகெய்ன் உட்பட 11 போதைப்பொருட்கள் பாவனை செய்யப்பட்டுள்ளதா என கண்டறியும் இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு 4200 ரூபா தேவைப்படும். நான் விரைவில் எனது இரத்தப் பரிசோதனை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது இரத்தப் பரிசோதனை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
கொகெய்ன் பாவனை இந்தளவுக்கு அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகளின் தொடர்பே காரணமாக இருக்க வேண்டும்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பினை வழங்குவேன்.
தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரபல பாராளுமன்ற உ-றுப்பினர் கொகெய்ன் பாவனையாளராவார். அவரை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரஷ்ய பெண்களுடன் காண முடியும். மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே போதைப் பொருளிலிருந்தும் தவிர்ந்திருக்கிறார்கள்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலுள்ள சிலர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு கொழும்பில் மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர் களாகவும் இருக்கிறார்கள் என்றார்.
-Vidivelli
JVP👏👏👏
ReplyDeleteMr. Ranjan this is not your issue. First of all go inside temple & do what ever you want to do.
ReplyDeleteMind your own business.
You are a RACIST behind the screen, many recent incident are evidence for it. Don't make unnecessary Show/Drama in society.
இவன் இவனுடைய எல்லைகளை மீண்டும் மீண்டும் மீறுகின்றான். தொப்பி போட்டவனெல்லாம் இவனுடைய பார்வைக்கு மெளவி போல் தெரிவது தான் பிரச்சினை
ReplyDeleteWhat about Drinking Alcohol ? Prostitution ? These are too highly punishable crimes. Why not Mr.Ranjan talk of these ?
ReplyDeleteஉலமா சபை இவரிடம் பெயர் பட்டடியலைப்பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் பொய் கூறியிருந்தால் நாட்டுக்கு இவர் பொய்யயன் என்று பத்வா வழங்க வேண்டும். தயவு செய்து உலமா சபை உண்மை நிலை பற்றி அறிய முயற்சிக்க வேண்டும். சில நேரம் இவர் பக்கீர்மாரை குறித்துக் கூறலாம் அதனை ஆராய்ந்து பார்த்து அவர்கள் முஸ்லீங்கள் இல்லை என்றசெய்தியை வௌியிட வேண்டும். இவ்விடயம் உண்மையாயின் மிகவும் பாரதூரமான தவறு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் இன்றேல் பாரதூரமான அவதூறாகும்.
ReplyDeleteஇவர் சொல்வதில் என்ன தவறு? பத்துயில்முயீன் (ஷாபி மத்ஹப்புத்தகம்) எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும் கிதாபில் உள்ளதை சொல்றாரோ அல்லது பத்துயில்முயீன் (ஷாபி மத்ஹப்புத்தகம்) கிதாப் படி பாவிப்பவர்களை கண்டு சொல்றாரோ தெரியவில்லை அதுவுமில்லவிட்டால் இப்ப யாரு உலமா யாரு பொது மகன் என்று தெரியாத கொழப்பம் நிறைய பேர் ஜுப்பாவும் தோப்பும் அணிந்து கொண்டு இருப்பதால் இவர்களில் சிலரை கண்டுவிட்டு சொல்றாரோ தெரியவில்லை எதுவானாலும் உண்மைகள் வெளிவரும்
ReplyDeleteToday we are confused about individuals not knowing who is good man who is fake. There are so many wolves in sheep's clothing, we really don't know? Like there is a Tamil saying "what kind of snake is inside an anthill"
ReplyDeleteفتح المعين கிதாப வம்புக்கு இழத்து எமது பல்லகுத்தி பிறரிடம் மோரகொடுக்காம அமைச்சரிடம் வினவி உண்மையைப் பெற்றுக்கொள்ளமுடியும்
ReplyDelete