துமிந்த சில்வா போன்ற அப்பாவிகளை, ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் - அபயதிஸ்ஸ தேரர்
அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா போன்ற அப்பாவி கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் உள்ள விகாரையில் நேற்று நடைபெற்ற தர்ம உபதேசத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான அப்பாவிகள் சிறையில் தண்டனை அனுபவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தண்டனையை எதிர்த்து அவர் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மகிந்த ராஜபக்ச அணியினருக்கு ஆதரவான பிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
டுமிண்டவின் முக சாயல் அப்படியே இருக்கு இவருக்கு ஒருவெல சகோதரரோ...இயவருக்கு தண்ட மத சம்பந்தமான வெள கலை செஞ்சுட்டு பன்சலக்காவி இருக்கலாமே.
ReplyDeleteகொலகாரன் இவனுக்கு அப்பாவி.............
ReplyDelete