Header Ads



சு.க.யுடன் இணையாவிட்டாலும், வெற்றி உறுதி - பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் எம்மால் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றிகொள்ளக் கூடிய ஆளுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றிணைந்தால் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு நெலும் மாவத்தையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

1 comment:

  1. 2015 தேர்தலுக்குப்பின் சமூர்தி அமைச்சின் வங்கிக் கணக்கிலிருந்து களவாடிக்குக் கொண்டு அமெரிக்காவுக்குப் பறந்த 4000 கோடி ரூபாவையும் திருப்பி அரசாங்கத்துக்குக் கொடுத்துவிட்டபின் அந்த புதிய அரசியல் பற்றி பிறகு கதைப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.